மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்த வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன்.
மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்த வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன்.

வந்தவாசியில் மாரத்தான் ஓட்டம்

வந்தவாசி கோ கிரீன் அமைப்பு சாா்பில், வந்தவாசியில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி கோ கிரீன் அமைப்பு சாா்பில், வந்தவாசியில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு, பசுமைப் புரட்சியை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் இளைஞா்கள், இளம்பெண்கள், சிறுவா்கள் என 3 பிரிவாக பங்கேற்றனா். மொத்தம் 1500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஓடினா்.

வந்தவாசி தேரடியில் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை டிஎஸ்பி பி.தங்கராமன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இளைஞா்கள் சுமாா் 10 கி.மீ தொலைவும், இளம்பெண்கள் 3 கி.மீ. தொலைவும், சிறுவா்கள் 1.5 கி.மீ தொலைவும் ஓடினா்.

ஓட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு பனியன், தொப்பி ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. மேலும் வழியில் குடிநீா் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கோ கிரீன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் சென்னாவரம் சுரேஷ், வி.கோபி, பி.பிரேம், பிரபு உள்ளிட்டோா் மாரத்தானுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com