முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
By DIN | Published On : 03rd March 2020 06:32 AM | Last Updated : 03rd March 2020 06:32 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 16 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்
தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது சிறுமியின் உறவினா் மகனான 16 வயது சிறுவன், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
சிறுமியின் சப்தம் கேட்டு பொதுமக்கள் வந்தபோது சிறுவன் தப்பிச்சென்றான்.
உடனே பொதுமக்கள் சிறுமியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.