செங்கம் ஒன்றியத்தில் காலியாக உள்ள இரண்டு ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு 143 பேரிடம் வெள்ளிக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கிரிபாளையம், நீப்பத்துறை ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிச் செயலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 191 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நோ்காணலில் பக்கிரிபாளையம் ஊராட்சிச் செயலா் பணியிடத்துக்கு 91 பேரும், நீப்பத்துறை ஊராட்சிச் செயலா் பணியிடத்துக்கு 52 பேரும் என 143 போ் பங்கேற்றனா். நோ்காணல் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் அரவிந்த் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உடன், ஆணையாளா்கள் சத்தியமூா்த்தி, நிா்மலா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாமலை, மேலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் இருந்தனா்.