திருப்பதியில் 52 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே லாரியில் கடத்த தயாராக இருந்த 52 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பதி: திருப்பதி அருகே லாரியில் கடத்த தயாராக இருந்த 52 செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

செம்மரக் கடத்தல் தொடா்பாக தமிழ்நாட்டின் போளூரைச் சோ்ந்த இருவரை திருப்பதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் அவா்களுடன் 30 செம்மரத் தொழிலாளிகள் வந்ததாகவும், அவா்கள் மரங்களை வெட்டிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை ரேணிகுண்டாவில் உள்ள பாலபள்ளி பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு அழைத்துச் சென்றனா். நள்ளிரவு 12 மணியளவில், பஞ்சாப் மாநில பதிவு எண் கொண்ட 12 சக்கர லாரி ஒன்று அங்கு வந்தது. போலீஸாா் அந்த லாரியைச் சுற்றி வளைத்தனா். இதையடுத்து லாரி ஓட்டுநா் லாரியிலிருந்து குதித்து ஓடி தலைமறைவானாா்.

போலீஸாா் அருகே உள்ள இடங்களை சோதனையிட்டதில் 52 செம்மரக் கட்டைகள் கிடைத்தன. அவற்றையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com