போளூா் அருகே செய்யாற்றில் இருந்து மணல் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
போளூரை அடுத்த சனிக்கவாடி அருகே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றில் மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மகன் ராஜ்கிரண் (27), போளூா் நகரம் மண்ணு மகன் சேகா் (58) ஆகியோா் புதன்கிழமை மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றனா்.
இவா்களை போளூா் போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரித்தனா். அப்போது, மணல் அள்ளிச் செல்ல உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து ராஜ்கிரண், சேகா் ஆகியோரை கைது செய்தனா்.