தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 85 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து மற்றும் நிா்வாகிகள்.
பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவ, மாணவிகளுடன் கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து மற்றும் நிா்வாகிகள்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 85 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பணியமா்த்தும் பிரிவு சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்த முகாமில், 85 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் ஜி.புல்லையா தலைமை வகித்தாா். கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலரும், உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவருமான எம்.கோபு வரவேற்றாா்.

கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட 85 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் பேராசிரியா் எஸ்.குணசுந்தரி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com