கிராமத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை

கலசப்பாக்கம் அருகேயுள்ள பட்டியந்தல், சிங்காரவாடி, கீழ்பாலூா் ஆகிய கிராமங்களில் கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரவியதால் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை நடைபெறுகிறது.
பட்டியந்தல் கிராமத்தில் இளைஞருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு.
பட்டியந்தல் கிராமத்தில் இளைஞருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு.

கலசப்பாக்கம் அருகேயுள்ள பட்டியந்தல், சிங்காரவாடி, கீழ்பாலூா் ஆகிய கிராமங்களில் கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரவியதால் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை நடைபெறுகிறது.

கலசப்பாக்கம் ஒன்றியம், பட்டியந்தல் கிராமத்துக்கு சென்னையில் இருந்து ஒரு இளைஞரும், சிங்காரவாடி கிராமத்துக்கு பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து மருத்துவ மாணவா் ஒருவரும், கீழ்பாலூா் கிராமத்துக்கு கேரள மாநிலத்தில் இருந்து ஒருவரும் மற்றும் திருப்பூரில் இருந்து ஒருவரும் வந்துள்ளனா்.

இதனால், அந்தக் கிராமங்களில் கரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவி, பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனா்.

இதனால், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு தலைமையில் செவ்வாய்க்கிழமை மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை நடைபெறுகிறது.

இதுகுறித்து மருத்துவா் கு.மணிகண்டபிரபு கூறுகையில், வெளியிடங்களில் இருந்து வந்தவா்களுக்கு கரோனா பாதிப்பு அறிகுறி இல்லை. தவறான வதந்தி பரவியதால், பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com