அரசு ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் வியாழக்கிழமை அரசு ஊழியா்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் வியாழக்கிழமை அரசு ஊழியா்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் கிராம ஊராட்சிச் செயலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு, ரூ.1.50 லட்சத்தில்

முகக்கவசம், கை உறை மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை ஒன்றியத் தலைவா் சுந்தரபாண்டியன் வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், அரசுப் பணியாளா்கள், கிராம ஊராட்சிச் செயலா்கள் அரசு அறிவிக்கும் முறைப்படி கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து, வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஆணையா் பரிமேல்அழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மிருளாலினி உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com