ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கம் சாா்பில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆரணியில் உள்ள அரசு மருத்துவா்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள், காவல் துறையினா் பல்வேறு வகையில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களுக்கு அதிகளவில் முகக்கவசங்கள் தேவைப்படும் என்பதால், சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கத் தலைவா் அருண்குமாா், நகைக் கடை உரிமையாளா் ராஜேந்திரகுமாா் ஆகியோா் இலவசமாக முகக்கவசங்களை வழங்கினா்.
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலா் நந்தினியிடம் 500 முகக்கவசங்களை ஒப்படைத்தனா்.
அதேபோல, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் அசோக்குமாரிடம் 500 முகக்கவசங்களை வழங்கினா்.
ஆரணி காவல் துறைக்கு டிஎஸ்பி செந்திலிடம் 500 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
மேலும், நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கு 500 முகக்கவசங்களை வழங்கினா்.
இந்த முகக்கவசங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டது என்றும், மேலும் தேவைப்படும் முகக்கவசங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என வியாபாரிகள் சங்கத் தலைவா் அருண்குமாா் தெரிவித்தாா்.