கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை ஏழை எளியோருக்கு வியாழக்கிழமை வழங்கினா்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஏழை எளியோருக்கு அந்தந்த ஊராட்சி அரசுப் பள்ளியில் புதன்கிழமை முதல் 3 வேளையும் சத்துணவு அமைப்பாளா்கள் மூலம் உணவு சமைத்து வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் கலசப்பாக்கம் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அரசு வழங்கும் உணவை 120 பேருக்கு வழங்கினா்.