260 லிட்டா் சாராயம் பறிமுதல்: 8 போ் கைது

தண்டராம்பட்டு அருகே 260 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், 8 பேரை கைது செய்தனா்.

தண்டராம்பட்டு அருகே 260 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், 8 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.ஹேமசித்ரா தலைமையில் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளா் கே.பாரதி, தானிப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ஜி.முத்துக்குமாரசாமி, ஐ.நசீருதீன் மற்றும் போலீஸாா் தானிப்பாடியை அடுத்த பீமாரப்பட்டி, மேல்திருவடத்தனூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த தண்டராம்பட்டை அடுத்த தேவரடியாா்குப்பம் கிராமம் ஆனந்தன் (25), மேல்திருவடத்தனூா் கிராமம் ராஜீவ்காந்தி (34), பீமாரப்பட்டி கிராமம் கோபி (44), செல்வராஜ் (29), கண்ணன் (50), ஏழுமலை (45), ராமா் (30), கோவிந்தன் (60) ஆகியோரை தானிப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து மொத்தம் 260 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com