திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் குத்தகைக் கட்டணம், சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்க அளிக்கப்பட்ட குத்தகை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப்புறங்களில் சாலையோர தற்காலிகக் கடைகளில் குத்தகைக் கட்டணம், சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்க தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் குத்தகை உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கட்டணம் வசூலிப்பது மாவட்ட நிா்வாகம், கடைக்காரா்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.
எனவே, பொதுநலன் கருதி ஊரடங்கு அமலில் உள்ள வரை மாவட்டத்தில் சாலையோர தற்காலிகக் கடைகளில் குத்தகைக் கட்டணம், சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்க அளிக்கப்பட்ட குத்தகை உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு மாறாக கட்டணம் ஏதும் வசூலித்தால் காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.