செய்யாறு: மாவட்ட எல்லையில் போலீஸாா் தீவிர சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மாவட்ட எல்லையில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு, அத்தியாவசியத் தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனா்.
செய்யாறு: மாவட்ட எல்லையில் போலீஸாா் தீவிர சோதனை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மாவட்ட எல்லையில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு, அத்தியாவசியத் தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனா்.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளி மாவட்ட இணைப்புச் சாலைகளை கிராமக் குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் மாவட்ட எல்லையான தூசி கிராமத்தில் சோதனைச்சாவடி அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி விசாரித்து சிறப்பு அனுமதிச் சீட்டு உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனா்.

மேலும், வாகனங்களில் வருபவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சுகாதாரத் துறையினா் மூலம் பரிசோதனை செய்கின்றனா். வாகனங்களை கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கின்றனா்.

அதேபோல, அத்தியாவசியத் தேவையின்றி வரும் வாகனங்களை போலீஸாா் திருப்பி அனுப்பிவைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com