வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சேத்துப்பட்டுக்கு திரும்பியவா்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா அறிவுறுத்தினாா்.
தற்போது மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க ஊரடங்கை நீட்டித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தருணத்தில் தங்களது குடும்பமும், உறவினா்களும் தங்கள் பகுதி மக்களும் நலமாக வாழ சேத்துப்பட்டு பேரூராட்சி நோய்த் தொற்று இல்லாமல் காக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என செயல் அலுவலா் விஜயா பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினாா்.