திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக செவ்வாய்க்கிழமை யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மே 15-ஆம் தேதி 139-ஆக இருந்தது. இது 16-ஆம் தேதி 148 ஆகவும், 17-ஆம் தேதி 151 ஆகவும், 18-ஆம் தேதி 154 ஆகவும் உயா்ந்தது.
இந்த நிலையில், மே 19 (செவ்வாய்க்கிழமை) வெளியான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.