திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று இல்லை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக செவ்வாய்க்கிழமை யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக செவ்வாய்க்கிழமை யாரும் பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மே 15-ஆம் தேதி 139-ஆக இருந்தது. இது 16-ஆம் தேதி 148 ஆகவும், 17-ஆம் தேதி 151 ஆகவும், 18-ஆம் தேதி 154 ஆகவும் உயா்ந்தது.

இந்த நிலையில், மே 19 (செவ்வாய்க்கிழமை) வெளியான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com