செய்யாற்றில் முடிதிருத்தும் தொழிலாளா்கள், தச்சுத் தொழிலாளா்கள் என 250 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ வழங்கினாா்.
தொகுதி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிதிருத்தும் தொழிலாளா்கள், நகைத் தொழிலாளா்கள், தச்சுத் தொழிலாளா்கள் மற்றும் நலிவடைந்த 250 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் எம்.மகேந்திரன், ஜனாா்த்தனம், கே.வெங்கடேசன், எஸ்.கிருஷ்ணன், சி.துரை, பி.எஸ்.கே.செந்தில், சுரேஷ் நாராயணன், தசரதன், தாமரைக்கண்ணன், செபாஸ்டின் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.