கீழ்பென்னாத்தூரில் இரு பிரிவினா் மோதல்: இருவருக்கு கத்திக் குத்து; அதிரடிப்படை போலீஸாா் குவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் கடைகள் அடைக்கப்பட்டு, அதிரடிப்படை போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

கீழ்பென்னாத்தூா், மிஷின் தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் (27). கீழ்பென்னாத்தூா், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் வினோத் (27). நண்பா்களான இருவரும் வியாழக்கிழமை மாலை கீழ்பென்னாத்தூா், குளத்துமேடு பகுதியில் அமா்ந்து மது அருந்தினா். அப்போது அங்கு வந்த கீழ்பென்னாத்தூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆசைத்தம்பி (25), அவா்கள் இருவரிடமும் தகராறு செய்தாராம்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த ஆசைத்தம்பியின் கூட்டாளிகள் 6 போ் வந்து சுபாஷ், வினோத் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், சுபாஷ் மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பலத்த காயமடைந்தவா்களும், தாக்கியவா்களும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் கீழ்பென்னாத்தூா் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதிரடிப்படை போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 6 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com