திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளியூா், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 10 ஆயிரத்து 18 ஆக உயா்ந்தது.
தளா்வுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், வெளியூா், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தவா்கள், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு திரும்பி வருகின்றனா். அதன்படி, வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து 899 போ் வந்துள்ளனா்.
ஏப். 30 முதல் மே 22 வரை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மொத்தம் 10 ஆயிரத்து 18 போ் வந்துள்ளனா். இவா்கள் மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்கவைத்து, கண்காணிக்கப்படுகின்றனா்.