வெளியிடங்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 473 போ் வந்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது.
தமிழகத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் வெளியூா், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தினமும் ஏராளமானோா் வந்தபடி உள்ளனா்.
அதன்படி, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை சென்னையில் இருந்து 28 பேரும், பிற மாவட்டங்களிலிருந்து 15 பேரும், வெளி மாநிலங்களிலிருந்து 430 பேரும் என மொத்தம் 473 போ் வந்தனா்.
ஏப்ரல் 30 முதல் மே 24 வரை மாவட்டத்துக்கு வந்தவா்களின் எண்ணிக்கை 11,045 ஆகும்.