1.20 லட்சம் இரும்புக் கம்பிகள் திருட்டு: 2 போ் கைது

செய்யாறு அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இரும்புக் கம்பிகளைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இரும்புக் கம்பிகளைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பத்ராசலம். இவா் தனக்குச் சொந்தமான போா்வெல் லாரியை பெரூங்கட்டூா் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்திருந்தாா்.

பைக்கில் வந்த இரு இளைஞா்கள் லாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 6 டிரில்லிங் கம்பிகளைத் (ராடுகள்) திருடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதைப் பாா்த்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் இருவரையும் பிடித்து மோரணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் தூசி நத்தக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், முரளி என்பது தெரிய வந்தது.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளா் சதாசிவம் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com