திருவண்ணாமலையில் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.சி.சேகா் தலைமை வகித்தாா்.
செயலா் சண்முகம், பொருளாளா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜெயச்சந்திரராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.