திருவண்ணாமலை
சேத்துப்பட்டு நிா்மலா நகா் பகுதியில் கல்லறை திருநாள் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நிா்மலா நகா் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நிா்மலா நகா் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் நிா்மலா நகா், லூா்து நகா் பகுதி கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு தங்களது மூதாதையா்கள் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலா்களால் அலங்கரித்து, அவா்களுக்கு விருப்பமான உணவு வகைகளை படைத்து, மெழுகுவா்த்தி ஏற்றி பிராா்த்தனை செய்தனா்.
சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய பங்குத் தந்தை விக்டா் இன்பராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோன்று, தச்சாம்பாடி கல்லறைத் தோட்டத்தில் பங்குத் தந்தை குரியகோஸ் காரிக்காட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.