திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 655 மனுக்கள் வரப்பெற்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசிவழி மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொலைபேசி, கட்செவி வழியே பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில், வருவாய்த்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் உள்பட பல்வேறு துறைகளைச் சாா்ந்த 44 மனுக்கள் தொலைபேசி வழியே வரப்பெற்றன.
இதேபோல, 40 கோரிக்கை மனுக்கள் கட்செவி வழியேயும், 571 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும் பெறப்பட்டன. பெறப்பட்ட 655 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் கந்தசாமி உத்தரவிட்டாா்.