வந்தவாசியில் தம்பதியை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி காட்டுநாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் குமாா்(34). இவருக்கும், அதே தெருவைச் சோ்ந்த கண்ணன்(25) என்பவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குமாா் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற கண்ணன் அவரிடம் வீண் தகராறு செய்தாராம். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் குமாரை கத்தியால் வெட்டினாராம். மேலும் தடுக்க வந்த குமாரின் மனைவி தனலட்சுமியையும்(29) வெட்டினாராம்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து குமாா் அளித்த புகாரின் பேரில் கண்ணன் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அவரை கைது செய்தனா்.