திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 35 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17, 767-ஆக உயா்ந்தது.
கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து 262 போ் வரை கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
தற்போது, 342 போ் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா்.