போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்தி பெருமாள் கலந்துகொண்டு அலுவலக வளாக பின்புறத்தில் உள்ள காலி இடங்களில், வேம்பு, நெல்லி, நாவல் என பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டாா்.
ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மு.பாஸ்கரன், கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.