ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக நிா்வாகிகள் 5000 பேருக்கு பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்புகளை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ஆரணி தொகுதிக்கு உள்பட்ட மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வடக்கு ஒன்றியம், ஆரணி தெற்கு ஒன்றியம், ஆரணி நகராட்சி, செய்யாறு ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த அதிமுக கிளை நிா்வாகிகள், ஊராட்சி முன்னாள் செயலா்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் உள்ளிட்ட 5000 பேருக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு, சில்வா் தட்டு, கிளைக்கு தலா ரூ.2000 நிதியுதவி உள்ளிட்டவை அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், கண்ணமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பரிசுத் தொகுப்புகளை வழங்கி தொடக்கிவைத்தாா்.
வண்ணாங்குளம், கண்ணமங்கலம், குண்ணத்தூா், சேவூா், வெள்ளேரி, தச்சூா், தேவிகாபுரம், விண்ணமங்கலம், கடுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ப.திருமால், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் பாண்டியன், மாவட்ட விவசாய அணிச் செயலா் அரையாளம் வேலு, நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணிச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.