கீழ்பென்னாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சி, வீரபத்திர நகரில் அமைக்கப்பட்ட சிறு மின் விசையுடன்கூடிய குடிநீா்த் தொட்டியை கு.பிச்சாண்டி எம்எல்ஏ திறந்துவைத்தாா்.
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தக் குடிநீா்த் தொட்டி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குடிநீா்த் தொட்டியைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புச் செயலா் எம்.குப்புசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா்.ராஜேந்திரன், கு.அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.