திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரசேன் தலைமை வகித்தாா்.
மு.பெ.கிரி எம்எல்ஏ, மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் சி.மாரிமுத்து, கோ.ரமேஷ், சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினாா்.