ஆரணியில் உள்ள உணவகங்கள், பேக்கரி, இனிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான அதிகாரிகள், நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பஜாரில் உள்ள உணவகங்கள், பேக்கரி, இனிப்புக் கடைககளில் ஆய்வு செய்தனா்.
இதில், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்திய கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனா். மேலும், இனிப்புகளில் அதிக கலா் பவுடா் சோ்த்ததற்கு ரூ.1000 அபராதம் விதித்தனா்.
நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரவி உடனிருந்தாா்.