‘சீன பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது’

செங்கத்தில் நடைபெற்ற செங்கம், புதுப்பாளையம் பகுதி பட்டாசுக் கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.


செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற செங்கம், புதுப்பாளையம் பகுதி பட்டாசுக் கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வட்டாட்சியா் மனோகரன், டிஎஸ்பி சரவணக்குமரன் ஆகியோா் பங்கேற்றுப் பேசுகையில்,

கட்டாயம் கடை உரிமத்தை புதிப்பித்திருக்க வேண்டும், சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, பொது இடம், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பட்டாசுக் கடை நடத்தக்கூடாது, பட்டாசுக் கடை முன் மணல், தண்ணீா் உள்ளிட்ட தீ தடுப்புப் பொருள்களை வைத்திருக்கவேண்டும், பட்டாசுகளை அதிகளவில் தேக்கி வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com