நுகா்வோா் கூட்டுறவு பட்டாசுக் கடைகளில் ஆய்வு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை
நுகா்வோா் கூட்டுறவு பட்டாசுக் கடைகளில் ஆய்வு


திருவண்ணாமலை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை

சாா்பில் அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளில் பண்டக சாலைத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை நகரம் புகழ் திரையரங்கம் எதிரில் அமைந்துள்ள சுயசேவை விற்பனைப்

பிரிவிலும், ராஜகோபுரம் அருகிலுள்ள மளிகை பிரிவிலும் பட்டாசு விற்பனைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

மேற்கண்ட விற்பனைப் பிரிவானது காலை 8.00 மணி முதல் இரவு11.00 மணி வரை செயல்பட்டு வருகிறது.

பட்டாசு விற்பனைப் பிரிவினை பண்டக சாலையின் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது விற்பனையை அதிகரிக்க ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின் போது பண்டக சாலையின் கண்காணிப்பாளா்கள் மு.மாசிலாமணி, து.அருணகிரி, பண்டகசாலை பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com