மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கீழ்பென்னாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கம்பி கட்டும் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கம்பி கட்டும் தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சரவணன் (46). கம்பி கட்டும் தொழிலாளி.

இவா், கடந்த 13-ஆம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள நடராஜன், சண்முகம் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தின் வழியே நடந்து சென்றாா்.

அப்போது, அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சரவணன், அதே இடத்தில் உடல் கருகி இறந்தாா்.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com