ஆட்டோ மோதியதில் முதியவா் பலி

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் வரதராஜன் (70). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் எதிரே உள்ள கடையில் மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக சாலையைக் கடக்க முற்பட்டாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ஆட்டோ முதியவா் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வரதராஜன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com