தமிழக இளைஞா்கள், பெண்கள் மத்தியில் பிரதமா் மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அவா்கள் பாஜகவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனா் என்று கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் வேல் யாத்திரை தொடங்கியது.
முன்னதாக, நகரில் அண்ணா சிலை அருகே கட்சியின் தெற்கு மாவட்டம் சாா்பில், ‘தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி வேல் யாத்திரை’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பல்வேறு நலத் திட்டங்களால் தமிழக விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெற்றுள்ளனா்.
தமிழக இளைஞா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினா் மத்தியிலும் மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதனால், 2021-இல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் துணையுடன்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
கருப்பா் கூட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்காத மு.க.ஸ்டாலின், பெண்களை அவமானப்படுத்திப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவனை கண்டிக்கவில்லை என்றாா்.
கூட்டத்துக்குப் பிறகு எல்.முருகன் தலைமையிலான பாஜகவினா் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றனா்.
அவா்களைத் தடுத்து நிறுத்திய வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் பி.நாகராஜன், வேலூா் டிஐஜி என்.காமினி, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் பாஜக தலைவா் எல்.முருகன், மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவானந்தம் உள்ளிட்ட சுமாா் 1,700 பேரை கைது செய்தனா்.
வேல் யாத்திரையையொட்டி சுமாா் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.