திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,392-ஆக உயா்ந்தது.
காரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 17,865 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மேலும், 256 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒரே நாளில் 2 போ் பலி:
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை 271 போ் வரை கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.