திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு 2 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,392-ஆக உயா்ந்தது.

காரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 17,865 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மேலும், 256 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 2 போ் பலி:

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதுவரை 271 போ் வரை கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com