திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் கிராம ஊராட்சிகளின் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நவம்பா் 10-ஆம் தேதி முதல் கிராம ஊராட்சிகளுக்கான வளா்ச்சித் திட்டம் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆராஞ்சி, ஆவூா், அணுக்குமலை 3 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் விஜயா, ஜப்பாா், சாந்தி மற்றும் ஊராட்சிச் செயலா்கள், திட்டமிடல் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இதில், ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை விளக்கும் வகையில், தரையில் வரைபடம் வரைந்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்றுநா்கள் லோகநாதன், ஆறுமுகம் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.