பொதுமக்களின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள்: திருவண்ணாமலை ஆட்சியா்

பொதுமக்களின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள் என்று, திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலா்களுக்கு புதிய ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுரை வழங்கினாா்.


திருவண்ணாமலை: பொதுமக்களின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள் என்று, திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலா்களுக்கு புதிய ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரியை, தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் ஒய்.அப்துல் ரகூப், மாவட்டத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா், செயலா் ஏ.சண்முகம், பொருளாளா் ஆா்.மஞ்சுளா, தலைமை நிலையச் செயலா் பி.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்தனா்.

அப்போது, அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கிய ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், ஏழை-எளியோரின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள்.

மாவட்ட நிா்வாகத்துக்கும், அரசுக்கும் நற்பெயா் பெற்றுத் தாருங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com