புதிய சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி மறியலில்

வந்தவாசி அருகே புதிதாக அமைக்கப்படும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா், அப்பகுதி மக்கள்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா், அப்பகுதி மக்கள்.

வந்தவாசி அருகே புதிதாக அமைக்கப்படும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய சாலை அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த சாலையை கிளறி விட்டுள்ளனா். பின்னா் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவில்லையாம். இதனால் அந்தத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனா்.

இதுகுறித்து வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், சாலையை உடனடியாக அமைக்கக் கோரி, தொகுதிச் செயலா் எம்.கே.மேத்தாரமேஷ், நகரச் செயலா் கி.இனியவன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் வந்தவாசி - ஆரணி சாலையில் கீழ்க்கொவளைவேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ச.பாரி மற்றும் வந்தவாசி வடக்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தினா் மறியலைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com