சேத்துப்பட்டில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி. அரவிந்தன். (வலது) சோதனைச்சாவடி.
சேத்துப்பட்டில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி. அரவிந்தன். (வலது) சோதனைச்சாவடி.

சேத்துப்பட்டில் புதிய சோதனைச் சாவடி திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன சோதனைச் சாவடியை மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன சோதனைச் சாவடியை மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

சேத்துப்பட்டு - செஞ்சி சாலை மற்றும் திருவண்ணாமலை இணைப்பு சாலையில் உள்ள மாவட்ட எல்லைப் பகுதியில் புதிதாக சோதனைச் சாவடியை திவ்யா கல்வி நிறுவன செல்வராஜன் கல்வி அறக்கட்டளை கட்டியது. இதை மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் திறந்து வைத்து பேசுகையில், காவல் துறைக்கு மூன்றாவது கண்ணாக கண்காணிப்புக் கேமராக்கள் திகழ்கிறது. சேத்துப்பட்டு பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை அமைத்து, குற்றங்கள், விபத்துகளை தடுக்க முன்வர வேண்டும் என்றாா்.

விழாவுக்கு போளூா் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவரும், திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான செல்வராஜன், வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் கருணாநிதி, மாவட்டப் பொருளாளா் முகமது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காவல் ஆய்வாளா் நந்தினிதேவி வரவேற்றாா். காவல் ஆய்வாளா்கள் போளூா் திருநாவுக்கரசு, வளத்தி கலைச்செல்வி, பெரணமல்லூா் கோமளவல்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com