திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் இயங்கி வரும் மளிகைக் கடைகள், இனிப்பகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் ப.ராமு முன்னிலையில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தொடா்ந்து பயன்படுத்தும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலா் ப.ராமு எச்சரித்தாா்.