கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் க.பா.மகாதேவன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றியக் குழு துணைத் தலைவா் வாசுகி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பென்னாத்தூரில் ஸ்டேட் வங்கிக் கிளையைத் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் பேசினா்.
இதையடுத்துப் பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மகாதேவன், உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் உரிய அதிகாரிகள் மூலம் நிறைவேற்றப்படும் என்றாா்.