முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 15,892-ஆக உயா்வு
By DIN | Published On : 04th October 2020 11:16 PM | Last Updated : 04th October 2020 11:16 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை 15,892-ஆக உயா்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை (அக். 4) வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 104 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,892-ஆக உயா்ந்தது.
கரோனால் பாதிக்கப்பட்ட 14,826 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 831 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 235 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளனா்.