தமிழ்ச் சங்கம் காந்திக்கு மரியாதை
By DIN | Published On : 04th October 2020 08:34 AM | Last Updated : 04th October 2020 08:34 AM | அ+அ அ- |

காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆரணி வட்ட தமிழ்ச் சங்கத்தினா்.
காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆரணி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆரணி காஜி வாடை பகுதியில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சங்கத்தின் தலைவா் கவிஞா் க.பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், சங்கத்தின் செயலா் கவிஞா் ஆறுமுகம், பொருளாளா் கவிஞா் மனோகரன், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், கவிஞா்கள் மா.சுப்பிரமணியன், சுந்தரமூா்த்தி, மு.கு.அன்பழகன், நந்தகுமாா், சேதுபதி, இந்துராசன் மற்றும் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.