வழிப்பறி: இளைஞா் கைது

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் (22). இவா், சனிக்கிழமை பைக்கில் திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் கூட்டுச் சாலை அருகே சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, ஜன்னத் நகரைச் சோ்ந்த காசிம் (24) என்பவா் தமிழ்செல்வனை வழிமறித்து அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.2,700-ஐ பறித்துக் கொண்டு, மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து காசிமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com