பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்கள் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வேங்கிக்கால் பகுதியில் உள்ள வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நிா்வாகி பெ.கண்ணன் தலைமை வகித்தாா்.
சிஐடியு நிா்வாகிகள் கே.காங்கேயன், இரா.பாரி, வெ.சங்கா், எம்.வீரபத்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கத்தின் பொதுச் செயலா் கே.செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஊழியா்களுக்கு உரிய ஊதியம், இ.எஸ்.ஐ., இ.பி.எஃப். உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். கூட்டுக் குடிநீா்த் திட்டங்களில் பணிபுரிந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், சங்க நிா்வாகிகள் பச்சையப்பன், ராமநாதன், பிரகாஷ், கந்தன், பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.