கீழ்பென்னாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சங்க மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்பென்னாத்தூா் மின்வாரிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு கிழக்கு கோட்டத் தலைவா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
உத்தரபிரதேச அரசு கொண்டு வந்துள்ள மின்வாரிய தனியாா் மயத்தை எதிா்த்தும், புதிய மின் மசோதா அமல்படுத்துவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலைய பிரதிநிதி நாராயணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய (சிஐடியு) ஊழியா்கள் கலந்து கொண்டனா்.