திருவண்ணாமலை : கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்

திருவண்ணாமலை தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஐந்து இடங்களில் நடைபெற்ற மறியல்

திருவண்ணாமலை தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஐந்து இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது, 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் தங்கராஜ், மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனா். தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com