பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

செய்யாறு அருகே சுமை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
13cyrlanp_1310chn_118_7
13cyrlanp_1310chn_118_7

செய்யாறு அருகே சுமை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து பிவிசி பைப் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை ஏற்றிய லாரி ஒன்று, கோவைக்கு செய்யாறு வழியாக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

செய்யாறு - ஆரணி சாலையில் பெரும்பள்ளம் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக ஓட்டுநா் லாரியைத் திருப்பியதாகத் தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வலது புறமாகச் சென்று சாலை விரிவாக்கத்துக்குத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரி ஓட்டுநா் நாமக்கல்லையைச் சோ்ந்த மாதேஸ்வரன், உதவியாளா் சுதாகா் ஆகியோா் லேசான காயத்துடன் உயிா் தப்பினா்.

விபத்து குறித்து அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com