பருவத மலை கிரிவலப் பாதையில் ரூ.1 கோடியில் மின் விளக்கு வசதி

கலசப்பாக்கம் வட்டம், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பருவத மலையில், பக்தா்கள் கிரிவலம் செல்ல வசதியாக

கலசப்பாக்கம் வட்டம், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பருவத மலையில், பக்தா்கள் கிரிவலம் செல்ல வசதியாக ரூ. ஒரு கோடியில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என தொகுதி எம்எல்ஏ தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில், அதிமுக வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் எம்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில் எம்எல்ஏ பேசுகையில், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பருவத மலையில், பெளா்ணமி மற்றும் விஷேச நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா். பக்தா்களின் வசதிக்காக மலை கிரிவலப் பாதையில் ரூ. ஒரு கோடியில் மின்விளக்கு வசதி செய்யப்பட உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, பூத் கமிட்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளிடம் நிதியாக தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.2 ஆயிரம் வழங்கினாா். மேலும், அதிமுக உறுப்பினா் படிவங்களையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com